உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / காட்டூர் பண்ணாரி மாரியம்மன் கோவிலில் திருக்கல்யாண உற்சவம்

காட்டூர் பண்ணாரி மாரியம்மன் கோவிலில் திருக்கல்யாண உற்சவம்

கோவை; காட்டூர் ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் கோவிலில் 54ம் ஆண்டு திருக்கல்யாண உற்சவ திருவிழாவில் அம்மனுக்கு திருக்கல்யாணம் நடந்தது.


கோவை காட்டூர் ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் கோவில் 54ம் ஆண்டு திருக்கல்யாண உற்சவத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர். நேற்று செவ்வாயன்று அக்கினி கம்பம் நடுதலுடன் துவங்கிய விழாவில் அம்மனுக்கு வெள்ளிக்கவச அலங்காரம் செய்யப்பட்டது. பின்னர் திருவிளக்கு பூஜை, சக்தி கரகம் அழைப்பு ஆகியவற்றுடன் தனலட்சுமி அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இன்று திருக்கல்யாண உற்சவம் ஏராளமான பக்தர்கள் கலந்து கொள்ள சிறப்புடன் நடந்தது. அம்மனுக்கு தங்க கவச அலங்காரம் செய்யப்பட்டு வீதிகளில் உலா வந்தார். 15ம் தேதி மஞ்சள் மா விளக்கு பூஜையுடன் பக்தர்களுக்கு அன்னதானம் செய்யப்பட்டு விழா நிறைவு பெறுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !