உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஸ்ரீவில்லிபுத்துார் வைத்தியநாத சுவாமி கோயிலில் வைகாசி திருவிழா கொடியேற்றம்

ஸ்ரீவில்லிபுத்துார் வைத்தியநாத சுவாமி கோயிலில் வைகாசி திருவிழா கொடியேற்றம்

ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துார் மடவார்வளாகம் வைத்திய நாத சுவாமி கோயிலில் வைகாசி திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது.


நேற்று முன்தினம் இரவு ஏறு சக்கர விநாயகர் கோயிலில் இருந்து புனித மண் எடுத்தல் நடந்தது. நேற்று காலை 9:00 மணிக்கு மேல் கோயிலில் சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு பூஜைகள் செய்து ரகு பட்டர் கொடி பட்டம் ஏற்றினார். திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை கோயில் அலுவலர்கள், பட்டர்கள் செய்திருந்தனர். இரவு 7:00 மணிக்கு மேல் வெட்டி வேர் சப்பர வீதியுலா நடந்தது. இதனைத் தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறும் திருவிழாவில் தினமும் காலை பல்லக்கு சேவை, இரவு வீதியுலா, கோயில் முன்பு ஆன்மிக சொற்பொழிவு நடக்கிறது. மே 27 இரவு 7:00 மணிக்கு திருக்கல்யாணம், மே 29 காலை 8:00 மணிக்கு தேரோட்டம், மே 30 காலை 8:00 மணிக்கு வைகாசி விசாக சிறப்பு பூஜைகள் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !