உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பல்லடத்தில் சித்தர்கள் வழியில் வாழ்வியல் சிறப்பு பயிற்சி முகாம்

பல்லடத்தில் சித்தர்கள் வழியில் வாழ்வியல் சிறப்பு பயிற்சி முகாம்

பல்லடம்: பல்லடத்தில், விதியை மாற்றுவோம் எனும், சித்தர்கள் வழியிலான வாழ்வியல் சிறப்பு பயிற்சி முகாம் நேற்று நடந்தது.


பொள்ளாச்சியை அடுத்த, ஆனைமலை ஸ்ரீசத்யேந்திர சித்தர் பீடத்தின் சார்பிலான பயிற்சி முகாம், பல்லடம் வனம் அமைப்பின் வனாலயம் அடிகளார் அரங்கில் நடந்தது. வனம் அமைப்பின் ‌ துணைச் செயலாளர் ஈஸ்வரமூர்த்தி தலைமை வகித்தார். முன்னதாக, சின் முத்திரை மூலம் தியான வழிபாடு நடந்தது. தொடர்ந்து, 18 சித்தர்களுக்கான சிறப்பு பூஜைகள் நடந்தன. இதனையடுத்து, சித்தர்களை வசியம் செய்யும் ரகசியம், மந்திரம் உருவாக்கம் மற்றும் உச்சாடன ரகசியம், தோல்விகளை முறியடிக்கும் ரகசியம், உடல், மன, உயிர் ஆற்றலை மேம்படுத்துதல் உள்ளிட்டவை குறித்து விளக்கப்பட்டது. தொடர்ந்து, பல்வேறு வாழ்வியல் குறித்த பயிற்சிகளும் வழங்கப்பட்டன. கோவை, திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட பல்வேறு மாவட்ட பகுதிகளைச் சேர்ந்த நூற்றுக்கு மேற்பட்டவர்கள் இதில் பங்கேற்று பயனடைந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !