உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / எமனேஸ்வரம்: வெண்ணெய்த்தாழி கண்ணன் அலங்காரத்தில் பெருமாள்

எமனேஸ்வரம்: வெண்ணெய்த்தாழி கண்ணன் அலங்காரத்தில் பெருமாள்

பரமக்குடி: பரமக்குடி எமனேஸ்வரம் வரதராஜ பெருமாள் கோயில் பிரம்மோற்ஸவ விழாவில் வெண்ணெய்த்தாழி கண்ணன் அலங்காரத்தில் உலா வந்தார்.

எமனேஸ்வரம் பெருந்தேவி தாயார் வரதராஜ பெருமாள் கோயில் வைகாசி பிரம்மோற்ஸவம் நடக்கிறது.

நேற்று முன் தினம் காலை திருக்கல்யாண உற்ஸவமும், இரவு பூப்பல்லக்கில் வீதி உலாவும் நடந்தது.

நேற்று மாலை 6:00 மணிக்கு பெருமாள் வெண்ணைத்தாழி நவநீத கிருஷ்ணன் சேவையில் அருள்பாலித்தார்.

தொடர்ந்து பட்டு பல்லக்கில் வீதி உலா வந்த பெருமாளுக்கு வெண்ணெய், பால், தயிர் பிரசாதமாக வழங்கினர்.

இன்று காலை 6:30 மணிக்கு பெருமாள் குதிரை வாகனத்தில் அலங்காரமாகி திருமங்கையாழ்வார் வேடப்பாரியாக லீலை நடக்கிறது.

தொடர்ந்து மாலை தேரோட்டம், நாளை தீர்த்தவாரி உற்ஸவத்துடன் விழா நிறைவடையும். ஏற்பாடுகளை எமனேஸ்வரம் சவுராஷ்டிரா சபை நிர்வாகிகள் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !