அரசலீஸ்வரர் கோவில் வைகாசி விசாக தேர் திருவிழா
ADDED :8 days ago
வானுார்: ஒழிந்தியாம்பட்டு அரசலீஸ்வரர் கோவிலில் வைகாசி விசாக பெருவிழாவை முன்னிட்டு தேர் திருவிழா நடந்தது. கடந்த 20ம் தேதி விநாயகர் உற்சவத்துடன் விழா துவங்கியது. தொடர்ந்து தினமும் இரவு 8;00 மணிக்கு சிம்மன வாகனம், அதிகார நந்தி வாகனம், நாக வாகனம், ரிஷப வாகனம், யானை வாகனம், அரசமர வாகனத்தில் சுவாமி வீதியுலா நடந்தது. நேற்று இரவு 7;30 மணிக்கு சுவாமிக்கு திருக்கல்யாணமும், அதனைத் தொடர்ந்து குதிரை வாகனத்தில் சுவாமி வீதியுலாவும் நடந்தது. இன்று று காலை 7;30 மணிக்கு தேர் திருவிழா நடந்தது. திரளான பக்தர்கள் தேரை வடம்பிடித்து இழுத்தனர். நாளை 30ம் தேதி இரவு 10;00 மணிக்கு தெப்பல் உற்சவமும், நாளை 31ம் தேதி மாலை 1008 சங்காபிேஷகமும் நடக்கிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை உற்சவதாரர்கள் மற்றும் கிராம மக்கள் செய்துள்ளனர்