திருவிடைக்கழி சுப்பிரமணிய சுவாமி கோவில் வைகாசி சதய திருவிழா கொடியேற்றம்.
மயிலாடுதுறை; மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா திருவிடைக்கழி கிராமத்தில் சுப்பிரமணிய சுவாமி கோவில் உள்ளது. அறுபடை வீடுகளுக்கு இணையான முருக பெருமானும் சிவபெருமானும் ஒன்று என்ற தத்துவத்தில் அமைந்துள்ள ஒரே திருத்தலம். இக்கோவிலில் ஆண்டுதோறும் வைகாசி சதய திருவிழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி இவ்வாண்டு வைகாசி சதய திருவிழா கொடியேற்றத்துடன் நேற்று தொடங்கியது. கொடியேற்றத்தை முன்னிட்டு விநாயகர், முருகன், வள்ளி தெய்வானை, பஞ்சமூர்த்திகளுடன் சிறப்பு அலங்காரத்தில் கொடிமரம் முன்பு எழுந்தருளினர். தொடர்ந்து கொடிமரத்திற்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு சதய விழா கொடியேற்றம் நடந்தது. தொடர்ந்து சிறப்பு மகா தீபாராதனைகள் நடந்தது. முக்கிய விழாவாக வரும் 7ம் தேதி தரங்கம்பாடி கடற்கரையில் இரணிய சூரசம்ஹார விழாவும், 8ம் தேதி திருக்கல்யாணம் உற்சவமும், 10ம் தேதி திருதேரோட்டமும், 11ஆம் தேதி தீர்த்தவாரி உற்சவம் நடைபெறுகிறது. நிகழ்ச்சியில் திரளான பத்திரங்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.