உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கணக்கன்குப்பம் அண்ணாமலையார் கோவில் கும்பாபிஷேகம்; பக்தர்கள் திரண்டனர்.

கணக்கன்குப்பம் அண்ணாமலையார் கோவில் கும்பாபிஷேகம்; பக்தர்கள் திரண்டனர்.

செஞ்சி; கணக்கன்குப்பம் அண்ணாமலையார் கோவிலில் நடந்த மகா கும்பாபிஷேகத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டனர்.

செஞ்சி அடுத்த கணக்கன்குப்பம் கிராமத்தில் உள்ள சிவசக்தி விநாயகர், உண்ணாமலை அம்மன் சமேத அண்ணாமலையார் மற்றும் கெங்கை அம்மன் கோவிலில் திருப்பணிகள் செய்து ஜீர்ணோதாரண மகா கும்பாபிஷேகம் இன்று நடந்தது. இதை முன்னிட்டு கடந்த 2ம் தேதி காலை 6 மணிக்கு அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, கோ பூஜை, தன பூஜை, கணபதி, நவக்கிரக ஹோமம் ஆகியன நடந்தது. அன்று மாலை 5 மணிக்கு வாஸ்து சாந்தி, பிரவேச பலி, கும்ப அலங்காரம், யாகசாலை பிரவேசம் ஆகியன நடந்தது.  3ம் தேதி காலை 6 மணிக்கு வேதிகார்ச்சனை, வேதபாராயணம், மூலமந்திர ஹோம், காலை 10 மணிக்கு யந்திர ஸ்தாபனம், பரிவார மூர்த்திகளுக்கு அஷ்டபந்தன மருந்து சாற்றுதலும், மாலை 5 மணிக்கு மகா சங்கல்பம், தம்பதி பூஜை, யாகசாலை பூஜை, விசேஷ திரவிய ஹோமம், இரவு 9 மணிக்கு மூலவர் சிவசக்தி விநாயகர் உண்ணாமலை அம்மன் சாமி அண்ணாமலையார், கங்கை அம்மனுக்கு அஷ்டபந்தனம் சாற்றுதல் நடந்தது.

இன்று காலை 5 மணிக்கு கோ பூஜை, விக்னேஸ்வர பூஜை, வேதிகா அர்ச்சனை, ரக்ஷாபந்தனம், தத்துவர்த்தனையும், 8.30 மணிக்கு மகாபூர்ணாஹூதியும், 9 மணிக்கு யாத்திரா தானமும் 9.20 மணிக்கு கடங்கள் புறம்பாடும், 9.50 மணிக்கு ராஜகோபுரம் விமான கலசம் மகா கும்பாபிஷேகமும், தொடர்ந்து உண்ணாமலை அம்மன் சமேத அண்ணாமலையார், கெங்கையம்மனுக்கு மகா அபிஷேகம் நடந்தது. இதில் எம்.எல்.ஏ., கணேஷ்குமார், துணை சேர்மன் ஜெயபாலன், ஊராட்சி தலைவர் சுலோச்சனா ஜெயபால், விழா குழுவினர் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். கண்டாச்சிபுரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !