உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் /  நெல்லிக்குப்பம் திரவுபதி அம்மன் கோவிலில் திருக்கல்யாண உற்சவம்

 நெல்லிக்குப்பம் திரவுபதி அம்மன் கோவிலில் திருக்கல்யாண உற்சவம்

 நெல்லிக்குப்பம்: நெல்லிக்குப்பம் திரவுபதி அம்மன் கோவிலில் திருக்கல்யாண உற்சவம் நடந்தது.

நெல்லிக்குப்பம் திரவுபதி அம்மன் கோவிலில் தீமிதி திருவிழா பிரம்மோற்சவத்தை முன்னிட்டு கடந்த மே மாதம் 29ம் தேதி கொடியேற்றப் பட்டது. கடந்த 4 ம் தேதி முதல் பத்து நாள் உற்சவம் துவங்கியது. தினமும் காலை சிறப்பு அபிஷேகம் நடக்கிறது.இரவு பல்வேறு வாகனங்களில் அம்மன் வீதி உலா நடக்கிறது. நேற்று திரவுபதி,அர்ஜூனன் திருக்கல்யாணம் உற்சவம் நடந்தது. வரும் 12 ம் தேதி மாலை தீமிதி விழாவும்,14 ம் தேதி பட்டாபிஷேகமும் நடக்கிறது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !