உச்சிபுளி கருப்பணசுவாமி கோயிலில் கும்பாபிஷேகம்
ADDED :3 hours ago
உச்சிபுளி அருகே பனவாய்கூட்டம் முத்தமிழ் நகர் கருப்பணசுவாமி கோயிலில் கும்பாபிஷேக விழா நடந்தது.
ஜூன் 6 சனிக்கிழமை அன்று யாகசாலை பூஜைகள் துவங்கி, நேற்று காலையில் யாகசாலையில் வைத்திருந்த கும்பகலசங்கள் பறப்பாடாகி புனிதநீரில் மூலவருக்கு அபிஷேகம் செய்து, அலங்காரத்தில் பூஜைகள் நடந்தது. அன்னதானம் வழங்கப்பட்டது. பக்தர்கள் பலர் பங்கேற்றனர்.