உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கடலுார் சிவசக்தி நாகம்மன் கோவிலில் திருவிளக்கு பூஜை

கடலுார் சிவசக்தி நாகம்மன் கோவிலில் திருவிளக்கு பூஜை

கடலுார்: கடலுார் சிவா நகர், சிவசக்தி நாகம்மன் திருக்கோவிலில், விசுவ ஹிந்து பரிஷத் சார்பில் திருவிளக்கு பூஜை நடந்தது. விசுவ ஹிந்து பரிஷத் கடலுார் ஒன்றியதலைவர் செல்வகுமார் தலைமை தாங்கினார். மாவட்ட ஊடக பிரிவு தலைவர் கலைமணி திருவிளக்கு பூஜையை நடத்தினார். மாவட்ட செயலாளர் ஹரிதாசன் பங்கேற்று சிறப்புரையாற்றினார். ஒன்றிய தர்ம பிரசார் அமைப்பாளர் கணேசன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். மேலும் மாவட்ட தர்மாச்சாரிய சம்பர்க்க அமைப்பாளர் சுவாமி கார்த்திகானந்தா சரஸ்வதி, ஆசியுரையாற்றினார். திருவிளக்கு பூஜையில் அறுபத்தைந்து பெண்கள் பங்கேற்று பூஜையை சிறப்பித்தனர். மாவட்ட பஜ்ரங்தள் அமைப்பாளர் ஆசைத்தம்பி மற்றும் நகர செயலாளர் பிரதீப்குமார் நன்றி கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !