வடமதுரை கோயில்களில் கும்பாபிஷேகம்
ADDED :4 hours ago
வடமதுரை;வடமதுரை பால்கேணி அருகில் பாப்பாத்தியம்மன், சந்தனகருப்பணசுவாமி, மதுரை வீரன், சிவாலயம், சித்தர்கள் கோயில் கும்பாபிஷேகம் நடந்தது. நேற்றுமுன்தினம் அதிகாலை மகாகணபதி பூஜையுடன் துவங்கி விழாவில் 2 கால யாக பூஜைகளை தொடர்ந்து நேற்று காலை கடங்கள் புறப்பாடாகி புனித நீருற்ற கும்பாபிஷேகம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.
* எரியோடு மொங்குபெத்தன்பட்டியில் வெள்ளையம்மாள், பொம்மியம்மாள், மதுரைவீரன் கோயில்களிலும், எ.சித்தூர் கெட்டியபட்டியில் பெரியாண்டவர், முன்னூடும் பிள்ளை, கணபதி, கதிர் நரசிங்கப்பெருமாள், காமாட்சி அம்மன், பாப்பாத்தியம்மன், பட்டாளம்மன், சப்த கன்னிமார், கருடாழ்வார், கம்பத்தடி ஆஞ்சநேயர், பக்த ஆஞ்சநேயர், ராமானுஜர் ஆகிய கோவில்களிலும் கும்பாபிஷேகம் நடந்தது. திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.