பெரியகுளம் கவுமாரியம்மன் கோயிலில் ஆனித் திருவிழா; கம்பம் நடல்
பெரியகுளம்; பெரியகுளம் கவுமாரியம்மன் கோயில் ஆனித்திருவிழாவை முன்னிட்டு கோயிலில் கம்பம் நடுதல் விழா கோலகாலமாக நடந்தது.
பெரியகுளம் கவுமாரியம்மன் கோயிலில் ஆனித்திருவிழா முன்னிட்டு நேற்று இரவு சாட்டுதல் மற்றும் கம்பம் நடுதல் விழா நடந்தது. முன்னதாக வடகரை வரதப்பா தெருவில் இருந்து பூஜாரி செல்வப்பாண்டியன் வீட்டிலிருந்து கம்பமும், பக்தர்கள் கரகம், முளைப்பாரி எடுத்து வந்தனர். வழிநெடுகிலும் பொதுமக்கள் இரு புறமும் நின்று கம்பத்தின் மீது பூக்களை தூவி வரவேற்றனர். மேளம், தாளத்துடன் கோயில் வளாகத்தில் கொடிமரம் எதிரே கம்பம் நடப்பட்டது. கம்பத்திற்கு பால், தயிர், இளநீர், பன்னீர், சந்தானம் உட்பட பல்வேறு திரவியங்களால் அபிஷேம் செய்யப்பட்டது.
திருவிழா துவக்கம்: ஜூலை 6ல் கொடியேற்றத்துடன் முதல் நாள் திருவிழா துவங்குகிறது. பத்து நாட்கள் நடக்கும் திருவிழாவில் அம்மன் சிம்மம், குதிரை, ரிஷபம், யானை, அன்னப்பட்சி உட்பட பல்வேறு வாகனத்தில் வீதி உலா வருவார். முக்கிய திருவிழாவான 9-ம் நாள் ஜூலை 14ல் மாவிளக்கு ரத உற்சவமும், மறுநாள் 10ம் நாள் ஜூலை 15ல் அக்னிச்சட்டி திருவிழாவும், ஜூலை 21 ல் மறுபூஜை நடக்கிறது. விழாவில் எம்.எல்.ஏ., சபரி ஐங்கரன், கோயில் செயல் அலுவலர் சுந்தரி, பூஜாரிகள் செல்லப்பாண்டியன், காமுத்துரை பாண்டியன், கதிரேசன், மண்டகபடிதாரர்கள் உள்பட ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.