திருப்பனமூர் மகாதேவர் கோவிலில் துாய்மை பணி
ADDED :6 hours ago
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அடுத்த திருப்பனமூரில், மகாதேவி உடனுறை மகாதேவர் கோவில் உள்ளது.
மிக பழமையான இக்கோவிலில் நேற்று, காஞ்சி நால்வர் நற்பணி குழுவினர் துாய்மை பணி மேற்கொண்டனர்.
கோவில் வளாகத்தில் குவிந்திருந்த குப்பையையும், தேவையற்ற செடி, கொடிகளையும் அகற்றினர்.
கோவில் கோபுரங்கள், பிற விக்ரஹங்கள், பூஜை பொருட்கள், சுவாமி அலங்கார பொருட்களை சுத்தப்படுத்தினர்.