உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அம்மகளத்துார் முத்துாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்

அம்மகளத்துார் முத்துாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்

கள்ளக்குறிச்சி: அம்மகளத்துார் முத்துமாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா நேற்று நடந்தது.

நிகழ்ச்சியையொட்டி கடந்த 1ம் தேதி யாகசாலை பிரவேசம், விக்னேஸ்வர பூஜை, பிரவேச பலி பூஜையுடன் துவங்கியது. தொடர்ந்து நேற்று முன்தினம் பாவனாபிஷேகம், யாக மண்டப ஆராதனை, அக்னிகார்யம், வேதபாராயணம் உள்ளிட்ட பூஜைகள் நடந்தது.

கும்பாபிஷேக தினமான நேற்று காலை 5:00 மணிக்கு யாகசாலை பூஜைக்குப் பின் கடம் புறப்பாடாகி முத்துமாரியம்மன் மற்றும் கற்பக விநாயகர், பாலசுப்ரமணியர், முனீஸ்வரர் ஆகிய சன்னதிகளின் கோபுர கலசங்களில் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது.

நிகழ்ச்சியில் சுற்று வட்டார பகுதியைச் சேர்ந்த திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை அம்மகளத்துார் கிராம மக்கள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !