உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சூலூர் காமாட்சியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா; பக்தர்கள் வழிபாடு

சூலூர் காமாட்சியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா; பக்தர்கள் வழிபாடு

சூலூர்: சூலூர் எம்.ஜி.ஆர்., நகர் காமாட்யம்மன் கோவில் கும்பாபிஷேகத்தில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வழிபாடு செய்தனர்.


சூலூர் எம்.ஜி.ஆர்., நகரில் உள்ள காமாட்சியம்மன் கோவில் பழமையானது. இங்கு, வர்ணம் தீட்டுதல் உள்ளிட்ட திருப்பணிகள் நடந்து, 3 ம்தேதி மாலை, விநாயகர் வழிபாட்டுடன் கும்பாபிஷேக விழா துவங்கியது. இரண்டு கால ஹோமங்கள், பூர்ணா குதி, தீபாராதனை நடந்தன. 5 ம்தேதி காலை, புனித நீர் கலசங்கள், மேள, தாளத்துடன் கோவிலை சுற்றி எடுத்து வரப்பட்டு, 9:30 மணிக்கு, மூலவர் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு கும்பாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, மகா அபிஷேகம் மற்றும் அலங்கார தீபாரதனை பூஜை நடந்தது. சுற்றுவட்டாரத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்று அம்மனை வழிபட்டனர். தொடர்ந்து, அன்னதானம் நடந்தது. கோவில் நிர்வாக கமிட்டியினர் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !