உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கோவில் வி.ஐ.பி., தரிசனத்தை முறைப்படுத்த ஆலோசனை அமைச்சர் ரமேஷ் தகவல்

கோவில் வி.ஐ.பி., தரிசனத்தை முறைப்படுத்த ஆலோசனை அமைச்சர் ரமேஷ் தகவல்

திருச்சி: கோவில்களில் வி.ஐ.பி., தரிசனத்தை முறைப்படுத்துவது குறித்து ஆலோசித்து வருவதாக, ஹிந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் ரமேஷ் தெரிவித்தார்.


திருச்சி, ஸ்ரீரங்கத்தில் அவர் அளித்த பேட்டி: கோவில்களில் அடிப்படை வசதிகளை மேம்படுத்தி, பக்தர்களுக்கு வசதிகள் செய்து கொடுப்பது; வரலாற்று சிறப்புமிக்க கோவில்கள், இடிந்த நிலையில் உள்ள கோவில்கள், வழிபாடு இல்லாத கோவில்கள் ஆகியவற்றை கண்டறிந்து, திருப்பணி மேற்கொள்வது ஆகியவற்றுக்கு தமிழக பட்ஜெட்டில், முக்கியத்துவம் தரப்படும். ஸ்ரீரங்கம் கோவில் கிழக்கு கோபுர பணிகள் விரைந்து முடிக்கப்படும். திருச்செந்துார் கோவிலில் சேவை கட்டண உயர்வு குறித்து, மக்களிடம் கருத்து கேட்கும் அறிவிப்பு தான் வெளியிடப்பட்டது. ஆனால், மக்களை துாண்டும் நோக்கில், தவறான தகவல்களை பரப்பி வருகின்றனர். புதிய கட்டண நிர்ணயம், மக்கள் கருத்தின் அடிப்படையில் தான் முடிவு செய்யப்படும். அனைத்து கோவில்களிலும், வி.ஐ.பி., தரிசனத்தை முறைப்படுத்துவது குறித்து ஆலோசித்து வருகிறோம். கோவில் நடைமுறைகளை, உடனடியாக, முழுமையாக மாற்றி அமைத்து விட முடியாது. ஸ்ரீரங்கம் ‘யாத்ரி நிவாஸ்’ பெயரில் போலி இணையதளம் தொடங்கப்பட்டது குறித்து, வட மாநிலத்தை சேர்ந்தவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அரசு தரப்பில், ‘யாத்ரி நிவாஸ்’ முன்பதிவுக்கு இணையதளம் தொடங்க ஆலோசிக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.



தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !