கீழவளவு பஞ்சபாண்டவர் மலையில் காயகல்ப பயிற்சி
ADDED :7 minutes ago
மேலூர்: கீழவளவு பஞ்சபாண்டவர் மலையில் அறிவு திருக்கோயில் அறக்கட்டளை மற்றும் திருப்பத்தூர் மனவள கலை சார்பில் மக்களுக்கு காயகல்ப பயிற்சி அளித்தனர். மன்றத்தின் நிர்வாகி டாக்டர் சுகுமார், பேராசிரியர்கள் சுப்பிரமணி ஜீவா, இளங்கோ உள்ளிட்டோர் உடல் நலம், மனநலம், ஆன்ம நலம் பற்றி வாழ்வியல் நெறிமுறை கருத்துக்களை மக்களுக்கு செயல்முறை மூலம் பயிற்சி அளித்தனர். பயிற்சியில் கலந்து கொண்ட நூற்றுக்கும் மேற்பட்ட மக்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது. இந் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கீழவளவு சமூக ஆர்வலர் செந்தில் குமார், பாலன் பாலாஜி செய்திருந்தனர்.