திருப்போரூர் வேண்டவராசி அம்மன் கோவிலில் ஆடி பெருவிழா தொடக்கம்
ADDED :4 days ago
திருப்போரூர்: நெல்லிக்குப்பம் வேண்டவராசி அம்மன் கோவிலில், நேற்று ஆடி பெருவிழா தொடங்கியது.
திருப்போரூர் அடுத்த நெல்லிக்குப்பத்தில் பிரசித்தி பெற்ற வேண்டவராசி அம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் ஆடி மாதத்தில் ஏழு வாரம் ஆடிப்பெருவிழா விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில், இந்தாண்டு முதல் வாரமான ஆடிப்பெருவிழா, நேற்று தொடங்கியது. இந்த விழாவை ஒட்டி கால கணபதி ஹோமம் மற்றும் மூலவர், உற்சவருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. உற்சவர் சிறப்பு அலங்காரத்தில் பக்தர் களுக்கு அருள்பாலித்தார். இதில், பிரதான விழாவாக வரும் 26ம் தேதி, ஆடிப்பெருவிழா நடைபெறுகிறது. அன்றைய தினம், மூலவர் அம்மனுக்கு 108 சங்காபிஷேகம், 308 பால்குட ஊர்வலம், கூட்டு வழிபாடு, ஊஞ்சல் சேவை உத்சவம் நடைபெறுகிறது.