உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மனக்குறை தீர மதுரை மீனாட்சி அம்மனை தரிசிப்போம்

மனக்குறை தீர மதுரை மீனாட்சி அம்மனை தரிசிப்போம்

மலையத்துவஜ பாண்டிய ராஜாவின் மகள் மீனாட்சி. யாகத்தீயில் பிறந்தவள் இவள். இவளுக்கு பிறவியிலேயே  மூன்று மார்புகள் இருந்தன. இவள் தன்னுடைய கணவரை சந்திக்கும் போது மூன்றாவது மார்பு மறையும் என அசரீரி ஒலித்தது.

அதன்படியே அவள் கன்னி பருவத்தில் கைலாயத்திற்கு சென்ற போது சிவபெருமானை பார்த்ததும் மூன்றாவது மார்பு மறைந்தது. ‘இவரே உன் மணாளன்’ என அசரீரி ஒலித்தது. இதன்பின் மீனாட்சிக்கும், சிவபெருமானுக்கும் மதுரையில் திருமணம் நடந்தது. இன்றும் சித்திரை மாதத்தில் நடக்கும் மீனாட்சி திருக்கல்யாணம் பிரபலம். 

மரகதப்பச்சை நிறம் கொண்ட இவள் வலது கையில் கிளியும், இடது கையை கீழ் நோக்கி தளர்த்தியும் காட்சி தருகிறாள். தினந்தோறும் நடக்கும் ஆறு கால பூஜையில் மீனாட்சிக்கு முதலிலும், பின் சிவபெருமானுக்கும் பூஜை நடக்கிறது. தேவார மூவர் உள்ளிட்ட பல அருளாளர்கள் இங்கு பாடியுள்ளனர். சித்தர்களில் ஒருவரான சுந்தரானந்தரின் ஜீவசமாதி இங்குள்ளது. மதுரையில் சிவபெருமான்  நடத்திய திருவிளையாடல்களை பரஞ்ஜோதி முனிவரின் திருவிளையாடல் புராணம் போற்றுகிறது. 

எப்படி செல்வது: மதுரை மத்திய பஸ் ஸ்டாண்டில் இருந்து 1 கி.மீ., 
நேரம்: அதிகாலை 5:00 – 12:30 மணி; மாலை 4:00 – 10:00 மணி 
தொடர்புக்கு: 0452 – 234 4360


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !