நெல்லிக்குப்பம் கோவிலில் பத்மாவதி தாயாருக்கு சிறப்பு வழிபாடு
ADDED :1 days ago
நெல்லிக்குப்பம்: நெல்லிக்குப்பம் கோவிலில் பத்மாவதி தாயார் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார்.
நெல்லிக்குப்பம் பாமா ருக்குமணி சமேத வேணுகோபால சுவாமி கோவிலில், ஆடி மாத வெள்ளிக்கிழமையையொட்டி கோ பூஜை, மூலவருக்கும் தனி சன்னதியில் வீற்றிருக்கும் பத்மாவதி தாயாருக்கும் சிறப்பு திருமஞ்சனமும் தீபாராதனையும் நடந்தது. தாயார் சிறப்பு அலங்காரத்தில் அருள் பாலித்தார். பல்வேறு கோவில்களில் ஆடி வெள்ளி சிறப்பு பூஜைகள் நடந்தன.