திருச்சுழி குண்டாற்றில் ஆடித்தபசு
ADDED :1 days ago
திருச்சுழி: திருச்சுழி குண்டாற்றில் நடந்த ஆடித்தபசு விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
திருச்சுழி திருமேனிநாதர் சாமி கோயிலில் ஆடி தபசு விழா ஜூலை 20ல், கொடியேற்றத்துடன் துவங்கியது. விழா நாட்களில் சுவாமி, அம்பாள் சிம்மம், குதிரை, அன்னம், வெள்ளி, ரிஷப வாகனங்களில் வீதியுலா நடந்தது. 10ம் நாளான நேற்று மாலை 4:00 மணிக்கு குண்டாற்றில் ஆடித்தபசு நடந்தது.
திருமேனிநாதருக்கும் துணைமாலை அம்மனுக்கும் மாலை மாற்றுதல் நடந்தது. அம்மன் சாமியை வலம் வந்தபின், தீபாராதனை நடந்தது. பின்னர் சுவாமி ஊர்வலமாக கோயிலை அடைந்தனர். நிகழ்ச்சியை காண விருதுநகர், மதுரை, ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் குண்டாற்றில் குவிந்தனர்.