ராமநாதபுரம் கோயில்களில் ஆடித்திருவிழா உற்ஸவம்
ADDED :3 hours ago
ராமநாதபுரம்: ராமநாதபுரம் வெளிப்பட்டணம் சாயக்கார தெருவில் உள்ள முத்து மாரியம்மன் கோயிலில் ஆடி உற்ஸவம் முளைப்பாரி விழா நடந்தது.
தினமும் இரவில் கோலாட்டம், கும்மியாட்டம், ஒயிலாட்டம் உள்ளிட்டவை நடந்தது. நேற்று முன்தினம் அம்மனுக்கு அபிஷேக அலங்காரத்தில் தீபராதனையுடன் இரவில் முளைப்பாரி ஊர்வலம் நடந்தது. நேற்று அன்னதானம் வழங்கப்பட்டது. மாலையில் முளைப்பாரி ஊர்வலத்தில் பக்தர்கள் பலர் பங்கேற்றனர். இதே போன்று கம்பர் தெருவில் உள்ள தேக்குமலை கருப்பண்ணசுவாமி கோயில் விழாவில் ஆடி அமாவாசை உற்ஸவம் கொண்டாடப்பட்டது. நேற்று காலையில் மூலவருக்கு அபிஷேக அலங்காரத்தில் தீபாராதனை நடந்தது.அன்னதானம் வழங்கப்பட்டது.
ஆர்.எஸ்.மடை கருமலையான் கோயிலில் சுவாமிக்கு அலங்காரத்தில் அமாவாசை பூஜைகள் நடந்தது.