உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருப்புல்லாணி ஆதி ஜெகநாத பெருமாள் கோயிலில் ஆடிப்பூர விழா கோலாகலம்

திருப்புல்லாணி ஆதி ஜெகநாத பெருமாள் கோயிலில் ஆடிப்பூர விழா கோலாகலம்

திருப்புல்லாணி: திருப்புல்லாணி ஆதி ஜெகநாத பெருமாள் கோயிலில் ஆடி மாதம் வரக்கூடிய பூரம் நட்சத்திரத்தில் ஆண்டாளுக்கு ஆடிப்பூர விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.


12 ஆழ்வார்களில் ஒரே பெண் ஆழ்வார் ஆண்டாள் ஆவார். ஏழாம் நூற்றாண்டில் வாழ்ந்தவர். திருப்பாவை மற்றும் நாச்சியார் திருமொழி என்னும் இரண்டு பாடற் தொகுதிகளை இயற்றியுள்ளார். ஆண்டாளின் அவதார தினமான ஆடிப்பூர தினத்தை முன்னிட்டு, பெருமாள் கோயிலின் வளாகத்தில் உள்ள ஆண்டாள் சன்னதியில் உற்ஸவர்களுக்கு விசேஷத் திருமஞ்சனம் நடந்தது. சாற்றுமுறை கோஷ்டி பாராயணம் உள்ளிட்டவைகள் பாடப்பட்டது. நாலாயிர திவ்ய பிரபந்த பாடல்கள் மற்றும் ஆண்டாள் இயற்றிய திருப்பாவை பாடல்கள் கோயில் ஸ்தானிக பட்டாச்சாரியார்கள் பாடினார். மாலை 6:00 மணிக்கு வருடத்திற்கு ஒருமுறை மட்டுமே நிகழக்கூடிய விதமாக ஊஞ்சல் சேவையில் கல்யாண ஜெகநாத பெருமாளுடன், ஆண்டாள் சமேதராக வீற்றிலிருந்து சேவை சாதிக்கும் நிகழ்ச்சி நடந்தது. ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் சுவாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை ராமநாதபுரம் சமஸ்தான நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !