கடலுார் பாடலீஸ்வரர் கோவிலில் ஆடிப்பூர உற்சவம்
ADDED :13 hours ago
கடலுார்: கடலுார் பாடலீஸ்வரர் கோவிலில் ஆடிப்பூர உற்சவம் நடந்தது.
கடலுார் பெரிய நாயகி அம்மன் சமேத பாடலீஸ்வரர் கோவிலில் ஆடிப்பூர உற்சவம் கடந்த 5ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் காலை, மாலை சுவாமி மாட வீதியுலா நடந்தது. இன்று காலை பெரிய நாயகி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடந்தது. உற்சவர் பராசக்தி அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்து, வளையல், வஸ்திரங்கள் சாற்றி கொலு மண்டபத்தில் வைத்து தீபாராதனை நடந்தது. தொடர்ந்து, அம்மனுக்கு திருமாங்கல்யம், வளையல்கள் சாற்றி தீபாராதனை நடந்தது. அம்மனை சிவகர தீர்த்த குளத்திற்கு எழுந்தருள செய்து, தீர்த்தவாரி நடந்தது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். இதே போன்று, புதுப்பாளையம் பகவந்தர் சுவாமி மடத்திலும் ஆடிப்பூர உற்சவம் நடந்தது.