அரவிந்தர் பிறந்த நாளையொட்டி ஆரோவில்லில் கூட்டு தியானம்
வானுார்: அரவிந்தர் பிறந்த நாளையொட்டி, ஆரோவில்லில், போன் பயர் ஏற்றப்பட்டு கூட்டு தியானம் நடந்தது.
மனித ஒற்றுமைக்கு அடையாள சின்னமாக, சர்வதேச நகரை உருவாக்க வேண்டும் என்ற கருத்து, முதன் முதலாக தத்துவஞானி அரவிந்தர் எழுத்துகளில் இருந்து தோன்றி யது.
அரவிந்தர் ஆசிரம அன்னையின் பெரும் முயற்சியால், 1968ம் ஆண்டு, பிப்., 28ம் தேதி, புதுச்சேரியில் இருந்து, 10 கி.மீ., தொலைவில் விழுப்புரம் மாவட்டம், ஆரோவில் சர்வதேச நகரம் துவங்கப்பட்டு கட்டுமானப் பணிகள் துவங்கியது.
இந்நகரம் உருவாக முக்கிய காரணமாக இருந்த அரவிந்தரின் பிறந்த நாள், ஆரோவில்லில் நேற்று கொண்டாடப்பட்டது.
இங்கு வசிக்கும் பல்வேறு நாடுகளை சேர்ந்தவர்கள், உள்ளூர் வாசிகள் மற்றும் சுற்றுலா பயணிகள் ஏராளானோர் மாத்திர் மந்திர் அருகே அமைந்துள்ள ஆம்பி தியேட்டரில் நேற்று அதிகாலை 5:00 மணிக்கு, போன் பயர் ஏற்றி, 6:15 வரையில் கூட்டு தியானத்தில் ஈடுபட்டனர்.
தியானத்தின்போது, ஆரோவில் சாசனம் அன்னையின் குரலால் ஒலிபரப்பப்பட்டது. போன் பயர் தீப்பிழம்பின் பின்னணி யில், மாத்திர் மந்திர் தங்க நிறத்தில் ஜொலித்தது.