ஆதி காளியம்மன் கோயில் விழாவில் பறவைக்காவடி
ADDED :1 days ago
முதுகுளத்துார் அருகே திருவரங்கம் கிராமத்தில் அன்னை ஆதி காளியம்மன் கோயில் 24ம் ஆண்டு ஆடித்திருவிழா நடந்தது. தினந்தோறும் காளியம்மனுக்கு அபிஷேகம், சிறப்புபூஜை நடந்தது.பருவமழை பெய்து விவசாயம் செழிக்க வேண்டி பக்தர்கள் விநாயகர் கோயிலில் இருந்து முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக பால்குடம், அக்னி சட்டி, பறவை காவடி எடுத்து ஊர்வலமாக சென்றனர்.
பின்பு ஆதி காளிம்மனுக்கு பால்,சந்தனம் உட்பட பொருட்களால் அபிஷேகம், தீபாரதனை நடந்தது. பின் மக்கள் முளைக்கொட்டு திண்ணையில் இருந்து ஊர்வலமாக முளைப்பாரி எடுத்து சென்று தண்ணீரில் கரைத்தனர்.அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவில் திருவரங்கம், சுவாத்தான், கொளுந்துறை, வாத்தியனேந்தல், செல்லுார் கிராம மக்கள் பங்கேற்றனர்.