உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருத்தணி கோவிலில் திரண்ட பக்தர்கள்; காத்திருந்து தரிசனம்

திருத்தணி கோவிலில் திரண்ட பக்தர்கள்; காத்திருந்து தரிசனம்

 திருத்தணி: முருகன் கோவிலில், நேற்று ஆவணி மாத செவ்வாய்க்கிழமையை ஒட்டி, பல்லாயிரக்கணக்கில் திரண்ட பக்தர்கள், இரண்டு மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர். மலைப்பாதையில் போக்குவரத்து ஏற்பட்ட நெரிசலால், வாகன ஓட்டிகள் சிரமப்பட்டனர்.


திருத்தணி முருகன் கோவிலுக்கு, தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து, மூலவரை தரிசித்து வருகின்றனர். நேற்று, முருகப்பெருமானுக்கு உகந்த நாளான செவ்வாய்க்கிழமை மற்றும் சஷ்டி விழா என்பதால், வழக்கத்திற்கு மாறாக, பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் மலைக்கோவிலில் திரண்டனர்.


இதனால், பொது வழியில் இரண்டு மணி நேரத்திற்கு மேல் நீண்ட வரிசையில் காத்திருந்து, பக்தர்கள் தரிசனம் செய்தனர். மேலும், 100 ரூபாய் சிறப்பு தரிசன டிக்கெட்டில், ஒரு மணி நேரத்திற்கும் மேலாக வரிசையில் நின்று, முருகப்பெருமானை தரிசித்தனர். முன்னதா க, அதிகாலை 5:00 மணிக்கு, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், தங்க வேல், தங்க கிரீடம் மற்றும் வைர ஆபரணங்கள் அணிவித்து, சிறப்பு தீபாராதனை நடந்தது. காலை 8:00 மணிக்கு, சஷ்டியை ஒட்டி, உற்சவர் முருகனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது. இரவு 7:00 மணிக்கு, உற்சவர் முருகன் தங்கத்தேரில் தேர்வீதியில் உலா வந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பெரும்பாலான பக்தர்கள் வாகனங்களில் வந்ததால், மலைப்பாதையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. திருத்தணி இன்ஸ்பெக்டர் சிவகுமார் தலை மை யில், 20 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !