உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கிருபாபுரீஸ்வரர் கோவிலில் அம்மனுக்கு ஊஞ்சல் உற்சவம்

கிருபாபுரீஸ்வரர் கோவிலில் அம்மனுக்கு ஊஞ்சல் உற்சவம்

திருவெண்ணெய்நல்லூர்: திருவெண்ணெய்நல்லூர் கிருபாபுரீஸ்வரர் கோவிலில் அம்மனுக்கு ஊஞ்சல் உற்சவம் நடந்தது. திருவெண்ணெய்நல்லூர் மங்களாம்பிகை சமேத கிருபாபுரீஸ்வரர் கோவிலில் ஊஞ்சல் உற்சவத்தையொட்டி நேற்று முன்தினம் காலை பஞ்சமூர்த்தி சிறப்பு அலங்காரமும், தீபாராதனையும் நடந்தது. மாலை 4 மணிக்கு அம்மனுக்கு சந்தனகாப்பு அலங்காரம் செய்யப்பட்டது. இரவு ஊஞ்சலில் வைத்து அம்மனுக்கு தாலாட்டும், சிறப்பு பூஜைகளும் நடத்தப்பட்டது. அப்போது சிறப்பு அலங்காரத்தில் அம்மன், பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் வெங்கடகிருஷ்ணன், குருக்கள் ரவி, அருட்டுறைநாதன் அருட்சபையினர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !