திருப்புவனத்தில் மழை வேண்டி முளைப்பாரி திருவிழா
ADDED :1 days ago
திருப்புவனம்: திருப்புவனம் புதூர் சின்ன மாரியம்மன் கோயிலில் மழை வேண்டி முளைப்பாரி திருவிழா வெகு விமரிசையாக நடந்தது.
திருப்புவனம் புதூர் மேல தெருவில் சின்ன மாரியம்மன் கோயில் அமைந்துள்ளது இங்கு ஆண்டுதோறும் ஆடி மாத கடைசியில் மழை வேண்டி முளைப்பாரி திருவிழா நடத்துவது வழக்கம் இந்த ஆண்டு திருவிழா கடந்த வாரம் கொடியேற்றத்துடன் தொடங்கியது. நேற்று முன்தினம் மாலை 300க்கும் மேற்பட்ட பெண்கள் சின்ன மாரியம்மன் கோயிலில் இருந்து முளைப்பாரி சுமந்து ஊர்வலமாக திருப்புவனம் புதூர், மாரியம்மன் கோயில் உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று பின் நீர் நிலைகளில் முளைப்பாரியை கரைத்து மழை வேண்டி அம்மன் பாடல்களை பாடினர். விழாவிற்கான ஏற்பாடுகளை திருப்புவனம் புதூர் கிராமத்தார்கள் மற்றும் பக்தர்கள் செய்திருந்தனர்.