காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் பவித்ர உத்சவம்
ADDED :13 hours ago
காஞ்சிபுரம்; பவித்ர உத்சவத்தின் முதல் நாளான நேற்று ஸ்ரீதேவி, பூதேவியருடன், காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள், பவித்ர மாலை அணிந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் பவித்ர உற்சவம் நேற்று தொடங்கியது. இதையொட்டி, சுவாமிக்கு சிறப்பு அபிஷேக, அலங்காரம் நடைபெற்றது. மாலையில் ஸ்ரீதேவி, பூதேவி சமேத வரதராஜ பெருமாள் பவித்ர மாலை அணிந்து பல்லக்கில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.