மேலச்சேரி ஆதிதிரவுபதி அம்மனுக்கு ஜெயந்தி விழா
ADDED :1 days ago
செஞ்சி: மேலச்சேரி ஆதி திரவுபதியம்மனுக்கு ஜெயந்தி விழா நடந்தது.
செஞ்சி அடுத்த மேலச்சேரி ஆதி திரவுபதி அம்மன் கோவிலில், சோழர் வணிகப்படை சங்கம் சார்பில் திரவுபதி அம்மன் ஜெயந்தி விழா நடத்தது. இதையொட்டி சிறப்பு யாகம், அபிஷேகம், ஆராதனை, மகாபாரத சொற்பொழிவு, பஜனை மற்றும் கோலாட்டம் நடைற்றது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவில் அமைப்பாளர்கள் மோகன்சாமி, பேராசிரியர் தீரன், மாவட்ட கவுன்சிலர் ஏழுமலை, வழக்கறிஞர் ஆத்மலிங்கம், சரவணன், ஊராட்சி தலைவர் செல்வமணி, சூரியபிரகாஷ், கோபிநாத், ரங்கநாதன் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.