உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சிங்கார பேட்டைமுருகன் கோவிலில் கும்பாபிஷேகம்

சிங்கார பேட்டைமுருகன் கோவிலில் கும்பாபிஷேகம்

விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி அடுத்த சிங்கார பேட்டைமுருகன் கோவிலில் கும்பாபிஷேகம் நடந்தது.

விக்கிரவாண்டி அடுத்த மூங்கில்பட்டு ஊராட்சி, சிங்காரபேட்டை, முருகன் கோவில் கிராம பொதுமக்களால் புதுப்பிக்கப்பட்டது. இதையொட்டி நேற்று முன்தினம் காலை கணபதி ஹோமத்துடன் யாகசாலை பூஜை துவங்கியது.

நேற்று காலை 10:00 மணிக்கு, இரண்டாம் கால யாக சாலை பூஜைகள் முடிந்து கலச புறப்பாடு நடந்தது.

தொடர்ந்து, கோவில் கலசத்திற்கு புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது. மூங்கில்பட்டு, சிங்கார பேட்டை மற்றும் சுற்றுப்புற கிராம பொதுமக்கள் சுவாமி தரிசனம் செய்தனர் .


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !