ஸ்ரீமுஷ்ணம் நித்தீஸ்வரர் சுவாமி கோவிலில் திருவாசகம் முற்றோதல்
ADDED :55 minutes ago
ஸ்ரீமுஷ்ணம்: ஸ்ரீமுஷ்ணம் நித்தீஸ்வரர் சுவாமி கோவிலில் திருவாசகம் முற்றோதல் நடந்தது. காலை 8 மணி முதல் இரவு வரை நடந்த இந்த நிகழ்வில் வேலூர் மாவட்டம் அணைக்கட்டு பாக்கம் கிராமத்தில் இருந்து வந்த கைலாய நாதர் திருக்கோவில் அடியார்கள் திருவாசகம் ஓதினர். இதற்கான ஏற்பாடுகளை சிவாச்சாரியார் ரவிசுந்தர் குருக்கள், அகத்திய குமரன் மற்றும் சிவனடியார்கள் செய்திருந்தனர்.