உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சூரியனார் கோவிலில் நேற்று மஹாபிஷேகம்

சூரியனார் கோவிலில் நேற்று மஹாபிஷேகம்

கும்பகோணம்: சூரியனார்கோவில் சிவசூரிய பெருமானுக்கு நேற்று நடந்த மஹாபிஷேகத்தில் திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.கும்பகோணம் அருகே உள்ள சூரியனார்கோவிலில் திருவாவடுதுறை ஆதீனத்துக்கு சொந்தமான உஷாதேவி, பிரத்யுஷாதேவி உடனாய சிவசூரியபெருமான் கோவில் உள்ளது. தமிழகத்தில் நவக்கிரகங்களுக்கென்றே அமைந்துள்ள சிறப்பு பெற்ற தலம். இங்கு சூரியபெருமானுக்கு ஒவ்வொரு தமிழ் மாதம், முதல் ஞாயிற்றுக்கிழமை காலை, சிறப்பு ஹோமத்துடன் மஹாபிஷேகம் நடைபெறுவது வழக்கம்.நேற்று மாசி மாத முதல் ஞாயிற்றுக்கிழமை மஹகாபிஷேகம் நடந்தது. நேற்று காலை, 9 மணிக்கு சிறப்பு ஹோமம் நடந்தது. உற்சவர் உஷாதேவி, பிரத்யுஷாதேவி உடனாய சிவசூரியபெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பின் கடங்கள் எடுத்து வரப்பட்டு, மஹாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து புஷ்பலங்காரம் மற்றும் மஹா தீபாராதனை நடந்தது. இதில் திருவாவடுதுறை ஆதீன கட்டளை சுப்ரமணியத் தம்பிரான் சுவாமிகள் பங்கேற்று, முன்னிலை வகித்தார். மஹாபிஷேகத்தில் சென்னை அப்பல்லோ நிறுவனத்தார் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் பலரும் பங்கேற்றனர். அனைவருக்கும் பிரசாதங்கள் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை கண்காணிப்பாளர் குருமூர்த்தி மற்றும் கோவில் பணியாளர்கள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !