ஜெயமுத்து மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்
விழுப்புரம்: கூவாகம் நவரத்னா சிட்டியில் உள்ள ஜெயமுத்து மாரியம்மன் கோவிலில் மகா கும்பாபிஷேகம் நடந்தது. விழாவையொட்டி நேற்று காலை 6 மணிக்கு இரண்டாம் கால யாகபூஜை, சுமங்கலி பூஜை, 108 மூலிகை யாகவேள்வி, நாடிசந்தானம், யாத்ராதானம் நடந்தது. தொடர்ந்து 9 : 45 மணிக்கு மயிலம் பொம்மபுரம் ஆதீனம் 20வது பட்டம் சிவஞானபாலய சுவாமி தலைமையில் கும்பாபிஷேகம் நடந்தது. விக்கிரவாண்டி பட்டாச்சாரியார் சந்திரசேகர குருக்கள் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தார். முற்பகல் 11 மணிக்கு பக்தர்களுக்கு அன்னதானமும், ருசி நீர் மோர் வழங்கப்பட்டது. விழாவில் எம்.பி., ஆனந்தன், திருவெண்ணெய்நல்லூர் ஒன்றிய அ.தி.மு.க., செயலாளர் குமார், டாக்டர்கள் பாலசுப்ரமணியம், சந்திரகலா, சென்னை தொழிலதிபர்கள் வலசை சந்திரசேகர், மகாவீர் சேட்டு, பழனி, சங்கர், விக்கிரவாண்டி பூரணாராவ், லோகையன், குமாரசாமி, பாபு ஜீவானந்தம், சர்க்கார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை திருப்பணிக்குழு தலைவர் ராமலிங்கம் ராதா மற்றும் கோவில் நிர்வாகி தட்சணாமூர்த்தி ஜீவா, தியாகராஜன், ராஜா ஆகியோர் செய்திருந்தனர்.