சேர்ந்தபூமங்கலம் கோயிலில் 108 திருவிளக்கு பூஜை
ஆத்தூர்: சேர்ந்தபூமங்கலம் கைலாசநாதர் கோயிலில் சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு 108 திருவிளக்கு பூஜை நடந்தது. பாரத திருமுருகன் திருச்சபை சார்பில் நடந்த இந்த பூஜையை மாநிலத் தலைவர் மோகனசுந்தரம் துவக்கி வைத்தார். திருச்செந்தூர் வட்டார ஆலோசகர் அம்மமுத்து முன்னிலை வகித்தார். சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு சித்ரகுப்த நாயனாருக்கு சிறப்பு வழிபாடு நடந்தது. பின்னர் கைலாசநாதர் சவுந்தர்யநாயகி, நந்திபெருமாள் ஆகியோருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார தீபாராதனை நடந்தது. சொக்கநாதர், மீனாட்சிஅம்மன், சைவகுரவர்கள், 63 நாயன்மார்கள், அகத்தியர், சப்தகன்னியர், பாலசுப்பிரமணியர் ஆகியோருக்கு சிறப்பு பூஜைகளும் நடந்தது. பூஜையை முன்னிட்டு பக்தர்கள் கிரிவலம் வந்தனர். அன்னதானம் நடந்தது.
நிகழ்ச்சியில் மாவட்ட ஆலோசகர் கூட்டாம்புளி சீனிவாசகம், மாவட்ட செயலாளர் சண்முகநாதன், ஜெயகனிஅம்மாள், சேர்ந்தபூமங்கலம் சண்முகசுந்தரி அம்மாள், நிர்வாகிகளான பரமசிவன், நாராயணன், முருகன், பன்னீர்செல்வன் உட்பட பலர் கலந்து கொண்டனர். பக்தர்களுக்கு ஆன்மீக மலர் வழங்கப்பட்டது.