உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வீரட்டானேஸ்வரர் கோவிலில் தேய்பிரை அஷ்டமி சிறப்பு வழிபாடு

வீரட்டானேஸ்வரர் கோவிலில் தேய்பிரை அஷ்டமி சிறப்பு வழிபாடு

திருக்கோவிலூர்: திருக்கோவிலூர் வீரட்டானேஸ்வரர் கோவிலில் தேய்பிரை அஷ்டமியை முன்னிட்டு சிறப்பு ஹோமம் நடந்தது.திருக்கோவிலூர், கீழையூர் வீரட்டானேஸ்வரர் கோவிலில் நேற்று முன்தினம் தேய்பிரை அஷ்டமியை முன்னிட்டு உலக நன்மைக்காக இரவு சிறப்பு ஹோமங்கள் நடந்தது. காலை 7 மணிக்கு மூலவர் வீரட்டானேஸ்வரருக்கு மகா அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது.மாலை 6:00 மணிக்கு விக்னேஷ்வர பூஜை. புண்õயகவாசம், கடஸ்தாபனம், ஸ்ரீருத்ர ஆவாகனம், அக்னிகாரியம், 64 பைரவர் பூஜைகள், பைரவர் ஹோமம், ஸ்ரீ ருத்ரத்ரிசதி ஹோமம், விசேஷ திரவியாகுதி நடந்தது.பூர்ணாகுதி முடிந்து கடம் புறப்பாடாகி சம்கார மூர்த்தி, மகா பைரவருக்கு அபிஷேகம், அலங்காரம், சோட சோபப்சார தீபாராதனை நடந்தது.சண்டிகேஸ்வரருக்கு சிவ நிர்மால்ய சமர்ப்பனம், சேத்ரபால பைரவருக்கு நிறைவு தீபாராதனை நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !