கன்னிகா பரமேஸ்வரி கோவிலில்ஜனன மகோற்சவ விழா
ADDED :4517 days ago
புதுச்சேரி: வாசவி கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவிலில், ஜனன மகோற்சவ விழா நடந்தது.மகோற்சவத்தை முன்னிட்டு, நேற்று காலை வைசியாள் வீதியிலுள்ள ஆர்ய வைசிய வாசவி திருமண மண்டபத்திலிருந்து, பெண்கள் அபிஷேகத் தட்டுடன் ஊர்வலமாக சென்றனர். அதைத் தொடர்ந்து, அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடந்தது.பின், அம்மனுக்கு கோடிகுங்கும அர்ச்சனை நடைபெற்றது. இதில், பச்சை நிற ஆடையணிந்து பெண்கள் கலந்து கொண்டனர். சிறப்பு அலங்காரம் செய்யப்பட்ட, அம்மனுக்கு தீபாராதனை நடந்தது. நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை, தேவஸ்தான நிர்வாக குழுவினர் செய்திருந்தனர்.