பஞ்சவடீ கோவிலில் பால் அபிஷேகம்
ADDED :4491 days ago
புதுச்சேரி: பஞ்சவடீ ஆஞ்ஜநேயர் கோவிலில், ஆஞ்ஜநேயருக்கு இன்று பால் அபிஷேகம் நடக்கிறது. திண்டிவனம் - புதுச்சேரி நெடுஞ்சாலை, பஞ்சவடீயில், 36 அடி உயர விஸ்வரூப ஜெயமங்கள பஞ்சமுக ஆஞ்ஜநேயர் கோவில் அமைந்துள்ளது. இங்கு, ஒவ்வொரு மாதமும் மூல நட்சத்திரத்தன்று, பால் மற்றும் மஞ்சள், பன்னீர், சந்தனம் ஆகிய மங்கள திரவியங்களால் சுவாமிக்கு அபிஷேகம் நடப்பது வழக்கம். இந்த மாதம், மூல நட்சத்திரமான இன்று (23ம் தேதி) மாலை 4.30 மணிக்கு, பால் அபிஷேகம் நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை பஞ்சமுக ஜெயமாருதி சேவா டிரஸ்ட் நிர்வாக அறங்காவலர் கோதண்டராமன், செயலாளர் நரசிம்மன், இணைச் செயலர் திருமலை மற்றும் அறங்காவலர்கள் செய்துள்ளனர்.