சாளக்கிராமக்கல்லை வீட்டில் வைத்து பூஜிக்கலாமா?
ADDED :4655 days ago
சாளக்கிராம வழிபாடு நடத்தும் வீட்டில் விஷ்ணுவின் சாந்நித்யம் நிலைத்திருக்கும். தினமும் தண்ணீர், பால் இரண்டிலும் அபிஷேகம் செய்ய வேண்டும். பின்னர், பட்டு வஸ்திரத்தால் அதனை ஒற்றிவிட வேண்டும். கல்கண்டு சேர்த்துக் காய்ச்சிய பால் நிவேதனம் செய்யவேண்டும். விஷ்ணு சகஸ்ரநாம பாராயணம் செய்யலாம்.