மேல்மலையனூர் கோயில் உண்டியல் வசூல் 38 லட்சம்!
ADDED :4500 days ago
செஞ்சி: மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் பக்தர்கள் 38 லட்சம் ரூபாயை காணிக்கையாக செலுத்தியிருந்தனர். விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் உண்டியல் எண்ணும் பணி இன்று காலை 10 மணிக்கு துவங்கி இரவு 8 மணிக்கு முடிவடைந்தது. இந்து சமய அறநிலையத் துறை உதவி ஆணையர்கள் மேல்மலையனூர் பிரகாஷ், திருவண்ணாமலை வேதா ஆகியோர் முன்னிலையில் இப்பணிகள் நடந்தன. இதில் 38 லட்சத்து 74 ஆயிரத்து 925 ரூபாய் ரொக்கமும், 175 கிராம் தங்க நகையும், 690 கிராம் வெள்ளி நகையையும் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியிருந்தனர். அறங்காவலர் தலைவர் சின்னதம்பி, அறங்காவலர்கள் ஏழுமலை, பெருமாள், காசி, சரவணன், வடிவேல், சேகர் ஆய்வாளர் கோவிந்தராஜ், மேலாளர் முனியப்பன் ஆகியோர் உடன் இருந்தனர்.