உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கிருஷ்ண ஜெயந்தி உற்­சவம் நாளை துவக்கம்

கிருஷ்ண ஜெயந்தி உற்­சவம் நாளை துவக்கம்

மாமல்­ல­புரம்: மாமல்­ல­புரம், நவ­நீத கிருஷ்­ண­சு­வாமி கோவிலில், நாளை (28ம் தேதி) கிருஷ்ண ஜெயந்தி விழா துவங்­கு­கி­றது.மாமல்­ல­பு­ரத்தில்,ருக்­மணி சத்­ய­பாமா உட­னுறை நவ­நீத கிருஷ்­ண­சு­வாமி கோவில் புகழ்­பெற்­றது. இங்கு ஆண்­டு­தோறும், கிருஷ்ண ஜெயந்தி உற்­சவ விழா கொண்­டா­டப்­படும். இவ்­விழா, நாளை துவங்கி, அடுத்த மாதம் 8ம் தேதி வரை நடை­பெற உள்­ளது. இதை­ய­டுத்து, நாளை மாலை 4:30 மணிக்கு, சுவா­மிக்கு திரு­மஞ்­சனம் நடை­பெறும். சுவாமி ஆயர்­பாடி எழுந்­த­ருளும் அலங்­கா­ரத்தில், பக்­தர்­க­ளுக்கு அருள்­பா­லிப்பார்.இதே­போன்று, தினமும் மாலையில் சுவா­மிக்கு திரு­மஞ்­சனம் செய்து, தினம் ஒரு அலங்­கா­ரத்தில், அவர் காட்­சி­ய­ளிக்­கிறார். 29ம் தேதி, ஆலிலை கண்ணன், 30ம் தேதி, வெண்­ணைத்­தாழி கண்ணன், 31ம் தேதி, கோவர்­த­ண­கிரி, அடுத்த மாதம் 1ம் தேதி, சக­டா­சூர வதம், 2ம் தேதி கோபா­லக்­கண்ணன், 3ம் தேதி, ஏணிக்­கண்ணன், 4ம் தேதி, காளிங்க நர்த்­தனம், 5ம் தேதி, ஊஞ்சல் கண்ணன், 6ம் தேதி, ஸ்ரீகி­ருஷ்ண லீலை, 7ம் தேதி, குழ­லூதும் கண்ணன் என, காட்­சி­ய­ளிக்­கிறார்.மேலும், தினமும் இரவு 7:30 மணிக்கு, ஆரா­வ­முடன், இரா­தா­கி­ருஷ்ண பாக­வதர் ஆகியோர், தினம் ஒரு தலைப்பில், உபன்­யாசம் செய்­கின்­றனர். 8ம் தேதி காலை 10:30 மணிக்கு, திரு­மஞ்­சனம், மாலை 4:30 மணிக்கு, வீதி­யுலா, 5:30 மணிக்கு, உறி­யடி கண்­ண­னுக்கு சிறப்பு வழி­பாடு, அதைத்­தொ­டர்ந்து, 6:00 மணிக்கு, உறி­யடி உற்­சவம் நடை­பெறும். நவ­நீத கிருஷ்­ண­சு­வாமி பக்த பஜனை சபா குழு­வினர், விழா ஏற்­பா­டுகள் செய்­துள்­ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !