உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ராமர் கோவிலில் உறி­யடி பெரு­மு­டி­வாக்கத்தில் திரு­விழா

ராமர் கோவிலில் உறி­யடி பெரு­மு­டி­வாக்கத்தில் திரு­விழா

ஊத்­துக்­கோட்டை: கோதண்­ட­ராம சுவாமி கோவிலில், 116வது ஆண்டு உறி­யடி திரு­விழா நடந்­தது. எல்­லா­புரம் ஒன்­றியம், பெரு­மு­டி­வாக்கம் ஊராட்­சியில் அமைந்­துள்­ளது, கோதண்­ட­ராம சுவாமி கோவில். இக்­கோ­விலில் ஒவ்­வொரு ஆண்டும், கிருஷ்ண ஜெயந்தி விழா முடிந்து, பூனர்­பூச நட்­சத்­திரம் வரும் நாளில், உறி­யடி திரு­விழா நடை­பெறும். இந்­தாண்டு, 116வது ஆண்டு திரு­விழா நேற்று நடந்­தது. காலை, சுவா­மிக்கு சிறப்பு அபி­ஷேக, ஆரா­தனை நடந்­தது. தொடர்ந்து, உற்­சவர் சிறப்பு அலங்­கா­ரத்தில், கோவில் முன் அமர்ந்­தி­ருந்தார். அவர் முன், உறி­யடி திரு­விழா நடந்­தது. இதில், திர­ளா­ன­வர்கள் உறியை அடிக்கும் முயற்­சியில் ஈடு­பட்­டனர். தொடர்ந்து உற்­சவர், கிரா­மத்தில் உள்ள முக்­கிய வீதி­களில் வலம் வந்து, பக்­தர்­க­ளுக்கு அருள்­பா­லித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !