உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பவா­னி­யம்மன் கோவிலில் மீன­வர்கள் கோலாகலம்

பவா­னி­யம்மன் கோவிலில் மீன­வர்கள் கோலாகலம்

ஊத்­துக்­கோட்டை: பவா­னி­யம்மன் கோவிலில், ஆறா­வது வார ஞாயிற்­றுக்­கி­ழ­மையை ஒட்டி, மாநி­லத்தின் பல்­வேறு பகு­தி­களில் இருந்தும், மீன­வர்கள் பெரி­ய­பா­ளை­யத்தில் குவிந்­தனர். பெரி­ய­பா­ளையம் பவா­னி­யம்மன் கோவிலில், ஆடி மாத விழா விசே­ஷ­மாக கொண்­டா­டப்­படும். ஆடி மாதம் முதல் ஞாயிற்­றுக்­கி­ழமை துவங்கி, 14 வாரங்கள், விழா நடை­பெறும். நேற்று, ஆறா­வது வார ஞாயிற்­றுக்­கி­ழ­மையை ஒட்டி, நாகப்­பட்­டினம், சென்னை ராய­புரம், வேளாங்­கண்ணி மற்றும் புதுச்­சேரி மாநி­லத்தில் இருந்து ஆயி­ரக்­க­ணக்­கான மீனவ மக்கள் பெரி­ய­பா­ளை­யத்தில் குவிந்­தனர். மேலும், ஆந்­திர மாநிலம், நாக­லா­புரம், பிச்­சாட்டூர், நகரி மற்றும் சுற்­றி­யுள்ள பகு­தி­களில் இருந்து லாரி, வேன் போன்ற வாக­னங்­களில் வேப்ப இலையை கட்­டிக்­கொண்டு பக்­தர்கள் வந்­தனர். சனிக்­கி­ழமை இரவு கோவி­லுக்கு வந்த பக்­தர்கள், தங்­கு­வ­தற்கு போது­மான வசதி இல்­லா­ததால், ஆரணி ஆற்றில் அமைக்­கப்­பட்ட தற்­கா­லிக குடில்­களில் தங்­கினர். சில பக்­தர்கள், வேப்­பிலை ஆடை கட்டி தங்­க­ளது நேர்த்திக் கடனை செலுத்­தினர். போக்­கு­வ­ரத்து நெரி­சலை கட்­டுப்­ப­டுத்த, போலீசார், லாரி உள்­ளிட்ட கன­ரக வாக­னங்­களை, ஊத்­துக்­கோட்­டையில் இருந்து சத்­தி­ய­வேடு, திரு­வள்ளூர் வழி­யாக திருப்பி விட்­டனர். ஊத்­துக்­கோட்டை டி.எஸ்.பி., கும­ரவேல் தலை­மையில் ஏரா­ள­மான போலீசார் பாது­காப்பு பணியில் ஈடு­பட்­டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !