உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வேம்­புலி அம்­ம­னுக்கு கோலம் கொண்ட அம்மன் சீர்­வ­ரிசை

வேம்­புலி அம்­ம­னுக்கு கோலம் கொண்ட அம்மன் சீர்­வ­ரிசை

திரு­வள்ளூர்: ஜாத்­திரை திரு­வி­ழாவை முன்னிட்டு, வேம்­புலி அம்­மனுக்கு, கோலம் கொண்ட அம்மன், தங்கை வீட்டு சீர்­வ­ரிசை வழங்கும் நிகழ்ச்சி நடை­பெற்­றது. திரு­வள்ளூர், வேம்­புலி அம்மன் கோவிலில், ஜாத்­திரை திரு­விழா நடை­பெற்று வரு­கி­றது. ஐந்தாம் நாள் நிகழ்ச்­சி­யான நேற்று, முக­மது தெருவில் உள்ள, கோலம் கொண்ட அம்மன் கோவிலில் இருந்து, தங்கை வீட்டு சீர்­வ­ரிசை வழங்கும் நிகழ்ச்சி நடை­பெற்­றது. இதை­யொட்டி, பக்­தர்கள் 100 பேர், தாரை, தப்­பட்டை முழங்க, அம்­ம­னுக்கு, தேங்காய், பழம், இனிப்பு, வளையல் என, பல்வேறு பொருட்­க­ளுடன் சீர்­வரிசை கொண்டு சென்று, வேம்­புலி அம்மனுக்கு படை­யி­லிட்­டனர். பின், அம்­ம­னுக்கு சிறப்பு அலங்­காரம் செய்­யப்­பட்டு, அபி­ஷேகம் நடை­பெற்­றது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !