உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அம்மன் கோவில்களில் கேதார கவுரி நோன்பு

அம்மன் கோவில்களில் கேதார கவுரி நோன்பு

திருத்தணி: அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில், நேற்று கேதார கவுரி நோன்பு விழா நடந்தது. திருத்தணி பழைய பஜார் தெருவில் உள்ள அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில், நேற்று, கேதார கவுரி நோன்பு விழா நடந்தது. விழாவை ஒட்டி, காலை, 10:00 மணிக்கு, மூலவர் அம்மனுக்கு, சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது. இரவு, 7:30 மணிக்கு, உற்சவர் அம்மனுக்கு ஊஞ்சல் சேவை நடந்தது. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசித்தனர்.அதே போல், திருத்தணி அக்கைய்யா நாயுடு சாலையில் உள்ள தணிகாசலம்மன் கோவில், மடம் கிராமத்தில் உள்ள படவேட்டம்மன் ஆகிய கோவில்களிலும் நோன்பு விழாவை முன்னிட்டு, திரளான பெண் பக்தர்கள், மூலவருக்கு சிறப்பு பூஜைகள் நடத்தி வழிபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !