திருவண்ணாமலை கோயில் பிரசாதக்கடையில் ஆய்வு
ADDED :4515 days ago
திருவண்ணாமலை: அருணாசலேஸ்வரர் கோயிலில் தனியார் நடத்தும் பிரசாதக் கடையில் தரமான பிரசாதம் விநியோகம் செய்யப்படுகிறதா என்பது குறித்து உணவுப் பாதுகாப்பு அதிகாரிகள் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். தமிழ்நாடு உணவுப் பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத் துறையின் மாவட்ட அலுவலர் அழகுராஜா தலைமையில் 19 பேர் கொண்ட குழு இந்த ஆய்வில் ஈடுபட்டது.