உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருச்செந்தூரில் கோயிலில் கார்த்திகை தீபத்திருநாள் கோலாகலம்

திருச்செந்தூரில் கோயிலில் கார்த்திகை தீபத்திருநாள் கோலாகலம்

திருச்செந்தூர்: திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயிலில் கார்த்திகை தீபத்திருநாளை முன்னிட்டு இரவு கடற்கரையில் சொக்கப்பனை ஏற்றப்பட்டது, கார்த்திகை தீபத்திருநாளை முன்னிட்டு நேற்று திருக்கோயில் அதிகாலை 4 மணிக்கு நடைதிறக்கப்பட்டு, 4.30 மணிக்கு விஸ்வரூபம், 5 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம் தொடர்ந்து மற்ற கால பூஜைகள் நடந்தது. காலையில் மூலவர் மற்றும் சுவாமி ஜெயந்திநாதருக்கு கார்த்திகை சிறப்பு அபிஷேகம் நடந்தது. மாலையில் மகாமண்டபத்தில் வைத்து நாரணி தீபம் ஏற்றப்பட்டு கோவில் தெய்வ சன்னதிகளில் தீபம் ஏற்றப்பட்டது. தொடர்ந்து சுவாமி ஜெயந்திநாதர் வள்ளி தெய்வானையுடன் தங்கசப்பரத்தில் சண்முகவிலாசத்தில் எழுந்தருளினார். இரவு கடற்கரையில் வைக்கப்பட்டிருந்த சொக்கப் பனையிலும் தீபம் ஏற்றப்பட்டது. அதன்பின் சுவாமி ஜெயந்திநாதர் வள்ளி, தெய்வானையுடன் தங்கரதத்தில் எழுந்தருளி கிரிவீதி வலம் வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !