உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருத்தணி முருகன் கோவில் உண்டியல் வசூல் ரூ.37 லட்சம்

திருத்தணி முருகன் கோவில் உண்டியல் வசூல் ரூ.37 லட்சம்

திருத்தணி: திருத்தணி முருகன் கோவில், உண்டியலில், கடந்த, 25 நாட்களில், 37.63 லட்சம் ரூபாய் ரொக்கமும், 191 கிராம் தங்கமும், பக்தர்கள் காணிக்கையாக அளித்து உள்ளனர். திருத்தணி முருகன் கோவிலுக்கு, தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து, மூலவரை தரிசித்து செல்கின்றனர். பக்தர்கள், உண்டியல்களில், ரொக்கம், தங்கம் மற்றும் வெள்ளி போன்ற பொருட்களை காணிக்கையாக செலுத்துகின்றனர். கடந்த மாதம், 24ம் தேதி முதல், இம்மாதம், 18ம் தேதி வரை, பக்தர்கள் உண்டியலில் அளித்த காணிக்கையை, நேற்று முன்தினம், கோவில் இணை ஆணையர் புகழேந்தி முன்னிலையில், கணக்கிடப்பட்டது. வள்ளி மண்டபத்தில், 120க்கும் மேற்பட்ட கோவில் ஊழியர்கள், பணம், தங்கம், வெள்ளி என, தனித்தனியாக பிரித்து எண்ணினர். இதில், 37 லட்சத்து 63 ஆயிரத்து 817 ரூபாய் ரொக்கமும், 191 கிராம் தங்கமும், இரண்டரை கிலோ வெள்ளி பொருட்கள் ஆகியவை இருந்தன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !