உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஊத்துக்கோட்டையில் மகா கால பைரவர் ஜெயந்தி விழா!

ஊத்துக்கோட்டையில் மகா கால பைரவர் ஜெயந்தி விழா!

ஊத்துக்கோட்டை: கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல், தொம்பரம்பேடு ஸ்ரீமகா கால பைரவர் கோவிலில் நடந்த, பைரவர் ஜெயந்தி திருவிழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை வழிபட்டனர். திருவள்ளூர் மாவட்டம், ஊத்துக்கோட்டை அடுத்த தொம்பரம்பேடு கிராமத்தில் உள்ளது ஸ்ரீமகா கால பைரவர் கோவில். பழமை வாய்ந்த இக்கோவிலில் ஒவ்வொரு மாதமும், அஷ்டமி நாட்களில் சிறப்பு பூஜைகள் நடைபெறும். விடுமுறை நாட்கிளில் அதிகளவு பக்தர்கள் இங்கு வந்து சுவாமியை தரிசனம் செய்வர். ஒவ்வொரு ஆண்டும் நவம்பர், டிசம்பர் மாதங்களில் ஸ்ரீ பைரவர் ஜெயந்தி விழா கொண்டாடுவது வழக்கம். இந்தாண்டிற்கான பூஜை இன்று, 25ம் தேதி திங்கட்கிழமை காலை, 5 மணிக்கு, 64 ஸ்ரீபைரவ கலச ஸ்தாபனத்துடன் விழா துவங்கியது. தொடர்ந்து கணபதி பூஜை, கலச புறப்பாடு, கலச அபிஷேகம், ஸ்ரீபைரவர் ஹோமம், பீஜாட்சர ஹோமம் ஆகிய நிகழ்ச்சிகள் நடந்தது. பின்னர் கிராம மக்கள் பொங்கல் வைத்து வழிபட்டனர். மூலவர் பைரவருக்கு சிறப்பு அபிஷேகமும், வெள்ளிக்காப்பு சாற்றுதலுடன் மகா தீபாராதனை நடந்தது. காலை, முதல் தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. முன்னதாக, காலை, 11 மணிக்கு கிராமத்தில் உள்ள சிறுவர்கள், ஆண்கள், பெண்களின் கலை நிகழ்ச்சிகள் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !